தெளிவாக சொல்ல முடியல
ஆனா கொஞ்சம் சந்தேகமாயிருக்கு அதவிட இதையெல்லாம் பொருட்படுத்தாத ஒவ்வொரு மனிசனையும் நினைக்ககுள்ள ஆத்திரமா வருது.
ஆனா கொஞ்சம் சந்தேகமாயிருக்கு அதவிட இதையெல்லாம் பொருட்படுத்தாத ஒவ்வொரு மனிசனையும் நினைக்ககுள்ள ஆத்திரமா வருது.
தமிழ் சிங்கள புத்தாண்டு வந்தப்போ இந்த அரசு சொல்லுது ஊரடங்கு பயங்கரமா நடைமுறை படுத்தப்படும்.
வெசாக் நேரமும் அப்படியே.
இது றமழான் முடியும் தருவாயில் பெருநாள் வரும் முஸ்லிம்கள் கொண்டாட தொடங்குவார்களே என்பதை கணக்கில் எடுக்காம ஊரடங்கை ரெண்டெடத்த வச்சிட்டு மற்ற இடமெல்லாம் தளர்த்தினால் பாதிக்கப்பட வாய்ப்பு அதிகம் இலங்கையர்களுக்கா அல்லது இங்கிலாந்தினர்களுக்கா?
அரசு என்பது முழு இலங்கையர்களுக்குமா? முக்காற் சிங்களவர்களுக்கு மட்டுமா?
முஸ்லிம் உறவுகளே பெருநாள் வருசம் ரெண்டு முறை வரும் கொரோனா வந்தால்? என்னவாகும் நமக்கு மட்டுமா தாக்கும்.
எல்லாத்துக்கும் மேலால யாரு திட்டம் தீட்டினாலும் எல்லாருமே கவனமில்லாம இருந்தாலும் அல்லாஹ்வின் நாட்டமின்றி எதுவும் நடக்காது.
என்பதற்காக இறைவன் எம்மை தான்தோன்றியா ஆடவும் சொல்ல வில்லை.
எம்உயிர் எம் பிள்ளைகளின் உயிர் எம் உறவினர் உயிர் மொத்தமாக உயிர் பெறுமதியானது.
கவனமாக சிந்தித்து செயற்பட முயற்சி செய்வோம்.