Monday, May 18, 2020

வளைகுடாவில் மெல்லச் சாகும்
என் வாலிபம்

வளைகுடாவில் மெல்லச் சாகும்
என் வாலிபம்
மீண்டும் வாங்க கை கொடுக்காத
என் வாணிபம்
பிள்ளைகளின் மழலை மொழிகளை
வலையொலி வாயிலாக கேட்கிறேன்
இல்லை இனி வழியென்று
தொலைவாக நானே வந்தேன்
களிப்புகளை தொலைத்து
பாச கவனிப்புகளை கலைத்து
பாலை நகர்களில் உழைத்து
ஊதியம் இழைக்க நான் வந்தேன்
வாய்க்கு ருசி தாய்க்கறி
மன மகிழ் மனைவியின் தலைக்கறி
இனம் புரியா மகள் மகன் ஆனந்தம்
என அத்தனையும் இழந்து தான் பறந்து வந்தேன்
கிழக்கே கடலலை அடிக்க
மேற்கே வயல் காற்றடிக்க
எத்தனை சந்தோசம் தந்த
பாலமுனை விட்டு தான் இப்பாலைவனம் வந்தேன்
கண்குளிர் நிறங்கள்
காணவே மரங்கள்
மாரியின் மழை பெய்யும்
இலங்கையை விட்டு பாஸ்போர்ட்
இலக்கத்தோடு தான் வந்தேன்.
இறைவா வழிகளை நேராக்கிடு
என் வலிகளை சீராக்கிடு
ஜமால்தீன் முஹம்மது முஜீப்
பாலமுனை
அன்னைக்கு ஓர் நாள் போதுமா


அன்னைக்கு ஓர் நாள் போதுமா
அவள் அன்புக்கு இங்கே
நிகர் ஒன்று உண்டா?
எந்நாளும் அன்னையர் தினமே.
முகப்புத்தகத்தை மூடிவிட்டு
மனங்களில் மலர் தூவி
அவள் முகத்தினில் காட்டுவோம்
தாரம் வந்தபின்
தாய் பாரமாய்ப் போவதோ?
மெய் காயப்பட்டு பெற்றவள்
மனதைக் காயப்படுத்தலாமா?
ஆதாயம் தேடும் உலகில்
அவள் ஆகாயமே நாம்
செல்லுமிடமெல்லாம்
கண்ணுள் மணியாய் அவளுக்கு நாம்
....அன்னை என்னுள் நான் மண்ணுள் புகும் வரை....
Dua

Friday, March 6, 2015

COVID 19 Awareness to Sri Lankan


தெளிவாக சொல்ல முடியல
ஆனா கொஞ்சம் சந்தேகமாயிருக்கு அதவிட இதையெல்லாம் பொருட்படுத்தாத ஒவ்வொரு மனிசனையும் நினைக்ககுள்ள ஆத்திரமா வருது.
தமிழ் சிங்கள புத்தாண்டு வந்தப்போ இந்த அரசு சொல்லுது ஊரடங்கு பயங்கரமா நடைமுறை படுத்தப்படும்.
வெசாக் நேரமும் அப்படியே.
இது றமழான் முடியும் தருவாயில் பெருநாள் வரும் முஸ்லிம்கள் கொண்டாட தொடங்குவார்களே என்பதை கணக்கில் எடுக்காம ஊரடங்கை ரெண்டெடத்த வச்சிட்டு மற்ற இடமெல்லாம் தளர்த்தினால் பாதிக்கப்பட வாய்ப்பு அதிகம் இலங்கையர்களுக்கா அல்லது இங்கிலாந்தினர்களுக்கா?
அரசு என்பது முழு இலங்கையர்களுக்குமா? முக்காற் சிங்களவர்களுக்கு மட்டுமா?
முஸ்லிம் உறவுகளே பெருநாள் வருசம் ரெண்டு முறை வரும் கொரோனா வந்தால்? என்னவாகும் நமக்கு மட்டுமா தாக்கும்.
எல்லாத்துக்கும் மேலால யாரு திட்டம் தீட்டினாலும் எல்லாருமே கவனமில்லாம இருந்தாலும் அல்லாஹ்வின் நாட்டமின்றி எதுவும் நடக்காது.
என்பதற்காக இறைவன் எம்மை தான்தோன்றியா ஆடவும் சொல்ல வில்லை.
எம்உயிர் எம் பிள்ளைகளின் உயிர் எம் உறவினர் உயிர் மொத்தமாக உயிர் பெறுமதியானது.
கவனமாக சிந்தித்து செயற்பட முயற்சி செய்வோம்.
நாம் எந்த கீரை சாப்பிட்டால் என்ன பலன் கிடைக்கும்...??
கொத்தமல்லி கீரை- மூளை, மூக்கு சம்பந்தமான சகல வியாதிகளும் குணமாகும். பசியைத் தூண்டும்.
அரைக்கீரை- நரம்பு தளர்ச்சியை போக்கும். தாய்ப்பால் பெருகும்.
வள்ளாரை - நினைவாற்றலை அதிகமாகும். யானைக்கால் நோய் குணமாகும்.
அகத்திக்கீரை- மலச்சிக்கலைப் போக்கும்.
முளைக்கீரை - பல் சம்பந்தமான வியாதிகளை குணமாக்கும்.
பொன்னாங்கன்னி - இரத்தம் விருத்தியாகும்.
தர்ப்பைப் புல்: - இரத்தம் சுத்தமாகும். கஷாயம் வைத்து பருகவும்.
தூதுவளை:- மூச்சு வாங்குதல் குணமாகும்.
முருங்கை கீரை: பொரியல் செய்து நெய்விட்டு 48 நாட்கள் சாப்பிட தாது விருத்தியாகும்.
சிறுகீரை: நீர்கோவை குணமாகும்.
வெந்தியக்கீரை- : இருமல் குணமாகும்
புதினா கீரை:- மசக்கை மயக்கம், வாந்தி குணமாகும்