அன்னைக்கு ஓர் நாள் போதுமா
அன்னைக்கு ஓர் நாள் போதுமா
அவள் அன்புக்கு இங்கே
நிகர் ஒன்று உண்டா?
அவள் அன்புக்கு இங்கே
நிகர் ஒன்று உண்டா?
எந்நாளும் அன்னையர் தினமே.
முகப்புத்தகத்தை மூடிவிட்டு
மனங்களில் மலர் தூவி
அவள் முகத்தினில் காட்டுவோம்
முகப்புத்தகத்தை மூடிவிட்டு
மனங்களில் மலர் தூவி
அவள் முகத்தினில் காட்டுவோம்
தாரம் வந்தபின்
தாய் பாரமாய்ப் போவதோ?
மெய் காயப்பட்டு பெற்றவள்
மனதைக் காயப்படுத்தலாமா?
தாய் பாரமாய்ப் போவதோ?
மெய் காயப்பட்டு பெற்றவள்
மனதைக் காயப்படுத்தலாமா?
ஆதாயம் தேடும் உலகில்
அவள் ஆகாயமே நாம்
செல்லுமிடமெல்லாம்
கண்ணுள் மணியாய் அவளுக்கு நாம்
அவள் ஆகாயமே நாம்
செல்லுமிடமெல்லாம்
கண்ணுள் மணியாய் அவளுக்கு நாம்
....அன்னை என்னுள் நான் மண்ணுள் புகும் வரை....

No comments:
Post a Comment