வளைகுடாவில் மெல்லச் சாகும்
என் வாலிபம்
என் வாலிபம்
வளைகுடாவில் மெல்லச் சாகும்
என் வாலிபம்
மீண்டும் வாங்க கை கொடுக்காத
என் வாணிபம்
என் வாலிபம்
மீண்டும் வாங்க கை கொடுக்காத
என் வாணிபம்
பிள்ளைகளின் மழலை மொழிகளை
வலையொலி வாயிலாக கேட்கிறேன்
இல்லை இனி வழியென்று
தொலைவாக நானே வந்தேன்
வலையொலி வாயிலாக கேட்கிறேன்
இல்லை இனி வழியென்று
தொலைவாக நானே வந்தேன்
களிப்புகளை தொலைத்து
பாச கவனிப்புகளை கலைத்து
பாலை நகர்களில் உழைத்து
ஊதியம் இழைக்க நான் வந்தேன்
பாச கவனிப்புகளை கலைத்து
பாலை நகர்களில் உழைத்து
ஊதியம் இழைக்க நான் வந்தேன்
வாய்க்கு ருசி தாய்க்கறி
மன மகிழ் மனைவியின் தலைக்கறி
இனம் புரியா மகள் மகன் ஆனந்தம்
என அத்தனையும் இழந்து தான் பறந்து வந்தேன்
மன மகிழ் மனைவியின் தலைக்கறி
இனம் புரியா மகள் மகன் ஆனந்தம்
என அத்தனையும் இழந்து தான் பறந்து வந்தேன்
கிழக்கே கடலலை அடிக்க
மேற்கே வயல் காற்றடிக்க
எத்தனை சந்தோசம் தந்த
பாலமுனை விட்டு தான் இப்பாலைவனம் வந்தேன்
மேற்கே வயல் காற்றடிக்க
எத்தனை சந்தோசம் தந்த
பாலமுனை விட்டு தான் இப்பாலைவனம் வந்தேன்
கண்குளிர் நிறங்கள்
காணவே மரங்கள்
மாரியின் மழை பெய்யும்
இலங்கையை விட்டு பாஸ்போர்ட்
இலக்கத்தோடு தான் வந்தேன்.
காணவே மரங்கள்
மாரியின் மழை பெய்யும்
இலங்கையை விட்டு பாஸ்போர்ட்
இலக்கத்தோடு தான் வந்தேன்.
இறைவா வழிகளை நேராக்கிடு
என் வலிகளை சீராக்கிடு
என் வலிகளை சீராக்கிடு
ஜமால்தீன் முஹம்மது முஜீப்
பாலமுனை
பாலமுனை

No comments:
Post a Comment